செல்போன் பார்த்த சிறுமி.. பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை

79பார்த்தது
செல்போன் பார்த்த சிறுமி.. பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை
மதுரை சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடியைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் சத்தியப்ரீதிகா (17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 28ம் தேதி வீட்டில் செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார். அதனை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிறுமி விஷம் அருந்தினார். மயங்கிய அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி