விஷச்சாராயத்தை ஒழிக்க முடியாத வக்கற்ற அரசு - எச்.ராஜா காட்டம்!

54பார்த்தது
விஷச்சாராயத்தை ஒழிக்க முடியாத வக்கற்ற அரசு - எச்.ராஜா காட்டம்!
விஷச்சாராயத்தை ஒழித்து மக்களை காப்பாற்ற வக்கற்ற ஸ்டாலின் அரசு எதிர் கட்சியினர் மீது வழக்கு தொடுப்பதிலேயே காவல் துறையினை பயன்படுத்துவது தெளிவு என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து கடந்த தினம் பாஜக சார்பில் மதுரையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற எச்.ராஜா உள்ளிட்ட 129 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எச்.ராஜா, இம்மாதிரி அரசியல் எதிர்ப்பை நசுக்குவதை விட்டுவிட்டை ஊரல் போடுபவர்களுக்கு எதிராக காவல்துறை கவனம் செலுத்துவது நல்லது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி