கர்நாடக மாநிலம் கின்னலா கிராமத்தை சேர்ந்த அனுஸ்ரீ (7) என்ற சிறுமி கடந்த 19ஆம் தேதி காணாமல் போன நிலையில் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து போலீசார் தேடி வந்தனர். சிறுமியின் வீட்டருகே உள்ள காலியிடத்தில் சாக்குமூட்டை இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சோதனை செய்த போலீசார் உள்ளே அவரின் சடலம் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.