சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 15 வயது சிறுவன் மூன்று வயது சிறுமியை கழிவறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் குழந்தை பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது.