திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்த 24 வயது இளைஞர்

52பார்த்தது
திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்த 24 வயது இளைஞர்
கேரளாவின் கொல்லத்தில் திருமணமான 30 வயது இளம்பெண்ணை 24 வயது இளைஞர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அனுஜித் (24) என்ற இளைஞரும், இளம்பெண்ணும் நெருங்கி பழகினர். இந்த நிலையில், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் பல மாதங்களாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். திருமணமான விஷயத்தை மறைத்து
வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருக்கு அந்த இளம்பெண் குறுஞ்செய்தி அனுப்பியது அனுஜித்துக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது பற்றி அனுஜித் அப்பெண்ணின் கணவரிடம் தெரிவித்ததும், கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அனுஜித் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக, அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கடக்கல் போலீசார் அனுஜித்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி