8 வருட காதல்.. திருமணமான உடனே கணவன் எஸ்கேப்

21146பார்த்தது
8 வருட காதல்.. திருமணமான உடனே கணவன் எஸ்கேப்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் ரோஸ்லின் மேரி (25), சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) சென்னையில் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். ரோஸ்லின் மேரியும் தமிழரசனும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கேட்டுள்ளார். ஆனால் காதலன் மறுத்துள்ளார். இதனால், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் இருவரது குடும்பத்தினரையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அந்த இளைஞர் மறுத்ததால், அவரை கைது செய்வதாக போலீசார் எச்சரித்தனர். பெண்ணின் வீட்டார் வற்புறுத்தலால், ரோஸ்லின் மேரியை திருமணம் செய்து கொண்ட தமிழரசன், சில மணி நேரங்களிலேயே ஓடி விட்டார். இதனால் அந்த இளம்பெண் மீண்டும் போலீசை அணுகினார். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி