இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் (5), அஸ்வின் (4), ரவீந்திரா ஜடேஜா (2) விக்கெட்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 219 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்த உள்ளது. மைதானம் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.