1ஆம் வகுப்பில் 36 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு

72பார்த்தது
1ஆம் வகுப்பில் 36 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடவடிக்கை மார்ச் 1ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமொழி கலந்து கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையில் 1ம் வகுப்புகளில் இதுவரை 35 ஆயிரத்து 809 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி