காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்

60பார்த்தது
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற ரூ.10 கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ரூ.306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுககு ரூ.297 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இந்த வழக்கில், தொகை விவரங்கள் ஏற்கும்படி இல்லை என நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், தொகையை சரிபார்த்து மீண்டும் புதிய அறிக்கையை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி