12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

53பார்த்தது
12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சேலத்தில் மட்டும் சிகிச்சைக்காக இதுவரை மொத்தம் 52 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 22 பலியாகி உள்ளனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே சிகிச்சை பெற்றவர்களில் 12 பேர் குணமாகி விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். இதையடுத்து மற்ற 18 பேருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி