திருப்பதி கோயிலில் பக்தர்களின் வருகை குறைவு

வெயில் காரணமாக திருப்பதிக்கு வரும் வெளியூர் பக்தர்கள் குறைந்துள்ளனர். இதனால், இன்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆகையால், 300 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்த பக்தர்களும், இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்களும் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக சுமார் 1½ மணி நேரத்திலேயே பக்தர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேறினர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்களும் மகிழ்ச்சியாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி