பிரதமர் நரேந்திர மோடி, அவரது தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாராணாசிக்கு ஆன்மீக பயணமாக சென்றிருந்தார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது பாஜகவினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.