சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். "மக்களின் போக்குவரத்திற்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கு வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மக்களவைத் தேர்தலில் வெல்லும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற குரல் கொடுப்பார்கள்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி