நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் கழகத் துணை பொதுச் செயலாளரும் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப்பட்டி, பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், கலிக்கம்பட்டி, செட்டியபட்டி, வலையபட்டி, அண்ணாநகர், சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதி கவுண்டன்பட்டி, ரெங்கசாமிபுரம், அமலிநகர் ஆகிய பகுதிகளில்,
பிரச்சார வாகனத்தில் சென்றும் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என ஆதரவு திரட்டினார். பிரச்சாரம் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.