விஜய பிரபாகரனுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது - ஆர்.பி.உதயகுமார்

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் நேற்று உய்யவந்தம்மண் கோவில்
திருவிழாவிற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்‌, விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜய பிரபாகரனுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெறுவார். இது வெற்றியின் அறிகுறி. யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பது போல வரவேற்பு இந்த ஓசை வெற்றி ஓசையாக ஒலிக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்தி