சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 26) அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிகிறார். இதுகுறித்து நடப்பு கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் முதலமைச்சர் பேசுகையில், பீகார் மாநிலத்தில் மாநில அரசு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்று சொன்னால் சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து நடத்தப்பட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ளக் கோரி இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வருகிறோம் என தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி