அதிமுக போராட்டம்: 23 கட்டுப்பாடுகள் விதிப்பு

தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் அதை கண்டித்தும் கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது, தனிநபரை தாக்கி பேசக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகள் அதிமுகவுக்கு காவல்துறை விதித்துள்ளது. உண்ணாவிரத போராட்டத்தையொட்டி 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி