வேலை பார்த்துக் கொண்டிருந்த வங்கி மேலாளர் பரிதாப சாவு

82பார்த்தது
இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி மாரடைப்பு மரணங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபாவில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கி கிளையில் பொது மேலாளராக பணியாற்றி வந்த ராஜேஷ் குமார் ஷிண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார். அலுவலகத்தில் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென நாற்காலியில் அமர்ந்தவாறு மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி