10th Result: தந்தையை இழந்த துக்கத்திலும் தேர்ச்சி

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று(மே 10) வெளியான நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாம்பூரில் திபீஸ் என்ற மாணவன் தனது தந்தை உயிரிழந்த துக்கத்தை தாங்கிக் கொண்டு தேர்வு எழுதியிருந்தார். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 73 மதிப்பெண்கள் எடுத்தார்.

தொடர்புடைய செய்தி