வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தமிழ்நாடு அரசு மரியாதை

62பார்த்தது
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தமிழ்நாடு அரசு மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் இன்று(மே 10) தமிழ்நாடு அரசின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

தொடர்புடைய செய்தி