இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல்

20027பார்த்தது
இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல்
கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி மிஷன்காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் விமலன் (45). தோவாளை கிழக்கு ஒன்றிய பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று 25 வயதுடைய இளம்பெண் வீட்டில் குளியல் அறையில் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு இளம்பெண்ணின் கணவர் ஓடி வந்தார். உடனே, விமலன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த இளம்பெண்ணும், கணவரும் விமலனின் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டனர். அப்போது அவர், 'இந்த பிரச்சினையை விட்டு விடுங்கள். இதை வெளியே சொன்னால் இந்த படத்தை முகநூலில் வெளியிடுவேன்' என மிரட்டினார். அத்துடன் இளம்பெண்ணையும், அவரது கணவரையும் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளம்பெண் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விமலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி