ஈரோட்டில் இளைஞர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை

68பார்த்தது
ஈரோட்டில் இளைஞர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை
ஈரோடு கருப்பண்ணசாமி கோயில் வீதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான முரளி (26) என்பவர் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன அவரது மனைவி வித்யா தனது கணவனை தேடியிருக்கிறார். இந்த நிலையில் இன்று (ஜூலை 2) காலை சாஸ்திரி நகர் அருகே ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் முட்புதரிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. அங்கு சென்று பார்த்தபோது கழுத்தில் பீர் பாட்டில் குத்தப்பட்ட நிலையில் முரளி இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி