மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள புனித மஹாகல் கோயிலுக்குள் சில பெண்கள் அனுமதியை மீறி ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இதை கவனித்த கோயில் பாதுகாவலர்கள் அந்த பெண்களை போனை உபயோகப்படுத்த வேண்டாம் என்று தடுத்தனர். இதனால் கோபமடைந்த பெண்கள், பாதுகாவலர்களை தாக்கத் தொடங்கினர். பாதுகாவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அந்த பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.