சிவகாசி: சட்டவிரோதமாக சரவெடி தயாரித்த இருவர் கைது...

57பார்த்தது
சிவகாசி அருகே அனுமதியின்றி சரவெடி தயாரித்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி தாலுகாவிற்குட்பட்ட ஆனையூர் கிராம நிர்வாக அலு வலர் லோகநாதன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவத்தன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்காலனி சித்துராபுரம் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு ஆலை பூட்டி இருந்தது. ஆனால் உள்ளே தொழிலாளர்கள் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த வருவாய்த்துறையினர் அந்த பட்டாசு ஆலையின் பின்புறமாக சென்ற போது அங்கு சில பெண்கள் சரவெடிகளை தயாரித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறையினர் அந்த கட்டிடத்தில் இருந்த பட்டாசு களை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி பட்டாசு தயா ரித்ததாக ஆலையின் உரிமையாளர் சேர்மக்கனி மகன் சவுந்திரபாண்டியன் (வயது 52) சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி