பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் முடக்கப்படும்: பீட்டர் அல்போன்ஸ்

52பார்த்தது
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் முடக்கப்படும்: பீட்டர் அல்போன்ஸ்
"சமக்ர சிக்க்ஷா அபியான்" திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இவ்வாண்டு தரவேண்டிய தனது பங்கு தொகையான ரூ. 3586 கோடியின் முதல் தவணையினையைக்கூட ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர மறுப்பது‌ கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், PM SHRI திட்டத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்தால் திட்ட நிதியினை ஒன்றிய அரசு தராதாம். இதனால், பள்ளி கல்வி துறையின் பல்வேறு செயல்பாடுகள் முடக்கப்படும் என தெரிவித்துள்ளார்.