சிவகாசியில் ரூ. 400 கோடிக்கு காலண்டர்கள் விற்பனை

2940பார்த்தது
சிவகாசியில், 2024ம் ஆண்டிற்கான தினசரி மற்றும் மாத காலண்டர்கள் சுமார் 400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது என்று உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், புத்தாண்டிற்கான தினசரி மற்றும் மாதக் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. காலண்டர்கள் தயாரிப்பு பணியில் மட்டும் சுமார்150க்கு மேற்பட்ட நிறுவனங்களும், சின்னசின்ன பணிகளில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் தற்போது நிறைவு கட்டத்திலுள்ள நிலையில் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து பெறப்பட்டு, சுமார் 90 சதவிகித ஆர்டர்களுக்கு அனுப்பும் பணிகள் நிறைவு பெற்று, மீதமுள்ள ஆர்டர்கள், இன்னும் ஒரு சில வாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து காலண்டர் தயாரிப்பாளர்கள் கூறும்போது, புத்தாண்டிற்கான தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்த ஆண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. ஒவ்வொரு இல்லங்களிலும், காலண்டர்களில் தினசரி கிழிக்கப்படும் தாளில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த பல நூறு நிறுவனங்களும், அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் பெற்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

தொடர்புடைய செய்தி