சாத்தூர் அருகே தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை.
விருதுநகர் மாவட்டம். சாத்தூரை அடுத்த ஆலங்குளம் அருகே உள்ள கே. லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35), பட்டாசு தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (27). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கருப்பசாமி வீட்டில் யாகும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.