பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி

1877பார்த்தது
சாத்தூர் அருகே பந்தூர்வார்பட்டியில் அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. அதில் அச்சங்குளம் , சூரங்குடி, பந்துவார்பட்டி பகுதியை சேர்ந்த 30 மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று (29.06.2024) வழக்கம் போல காலையில் பட்டாசு தயாரிப்பு செய்வதற்காக மருந்து கலவை செய்யும் பணியில் தொழிலாளர் ராஜ்குமார் உட்பட 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவையில் ஈடுபடும் போது உராய்வு ஏற்பட்ட வெடிவிபத்தில் அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் 3 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார்கள். சம்பவ இடத்திற்கு சாத்தூர் தாசில்தார் லோகநாதன், சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you