இராஜபாளையம்: சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது...

52பார்த்தது
இராஜபாளை அருகே சட்ட விரோதமாக தகரசெட் அமைத்து பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே மலையடிப்பட்டி பகுதியில் சார்பு ஆய்வார் மாரியம்மாள் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது R. C சர்ச் அருகே உள்ள பெட்டி கடையின் பின் பக்கம் தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு பண்டல்கள் இருப்பு வைத்து இருந்ததை கண்டறியப்பட்டன. மேலும் பெட்டி கடையில் போலீஸார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் பட்டாசுகளை பதுக்கியவர் என தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி