ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனை

63பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஏப்ரல் 17 ராமநவமியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுடன் சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. வண்ண வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உற்சவருக்கும் மூலவருக்கும் பல்வேறு வகையான வாசம் நிறைந்த பூக்களால் மலர் மாலைகள் சூட்டப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபாவின் பக்தி கீர்த்தனைகளை பாடி சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. முன்னதாக ராம நவமியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த ராமநவமி சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை, பந்தல்குடி, செட்டிபட்டி, வாழ்வாங்கி, சிதம்பராபுரம் சேதுராஜபுரம், செட்டிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி