ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

66பார்த்தது
தமிழகம் முழுவதும் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கருவாடு பேட்டை அருகே முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூலக்கரை N. வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நற்பணி இயக்க நிர்வாகிகள் நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், ரப்பர் ஆகிய கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை 500 மாணவ மாணவியர்களுக்கு வழங்கினர். அனைத்து மாணவ மாணவிகளும் வரிசையாக நின்று மகிழ்ச்சியுடன் கல்வி உபகரணங்களை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மூலக்கரை N. வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌

தொடர்புடைய செய்தி