புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை

4018பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை
அருப்புக்கோட்டையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினரும் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் ஒரு சில இடங்களில் புகையிலை பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கிராமப் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலைகள் பொருட்கள் தங்குதடை இன்றி விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளனர். புகையிலை பொருட்களால் பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே பாரபட்சம் இன்றி அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் அனைத்து இடங்களிலும் புகையிலை பொருட்கள் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த காவல்துறை தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :