மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ள பாடப் புத்தகங்கள்

56பார்த்தது
மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ள பாடப் புத்தகங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில், இன்று பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி, அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அரசு சார்பில் இன்று இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் பள்ளி திறக்கும் நாளன்று, இலவச பாட புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள், புத்தக பைகள், காலணிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த 2024-25 கல்வியாண்டிற்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றே மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநுால் கழகத்திலிருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கடர் பள்ளி, செஞ்சி ராஜாதேசிங்கு பள்ளி உள்ளிட்ட மையங்களில் கடந்த மாதம் வைக்கப்பட்டது. அங்கிருந்து, கல்வி மாவட்டங்கள் வாரியாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு அந்தந்த பள்ளிகளுக்கும் கடந்த வாரம் அனுப்பி வைத்து தயாராக உள்ளது. 1ம் வகுப்புலிருந்து பிளஸ் 2 வரை இலவச பாட புத்தகங்கள் 73, 740 மாணவர்கள், 77, 711 மாணவிகள் என 1 லட்சத்து 51 ஆயிரத்து 451 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி