தனியார் பள்ளியில் மாணவர்கள் எழுதிய கவிதை புத்தகமாக வெளியீடு

73பார்த்தது
தனியார் பள்ளியில் மாணவர்கள் எழுதிய கவிதை புத்தகமாக வெளியீடு
விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்டுரோடு அருகே உள்ள பனங்குப்பம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி சி. பி. எஸ். இ. பள்ளியில் மாணவர்கள் எழுதிய ஆங்கில கவிதை தொகுப்புகள் புத்தகமாக வெளியிடும் விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின் முன்னிலை வகித்தார். கல்வி நிர்வாகத் தலைவர் சுகன்யா ராபின் வரவேற்றார். விழாவிற்கு படைப்பு எழுத்து நிறுவனரும், செய்தி ஆசிரியருமான பிருந்தா கலந்துகொண்டு ஆங்கிலத்தில் புதுக்கவிதைகள் எழுவது எப்படி என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். தொடர்ந்து, 104 மாணவ, மாணவிகள் எழுதிய கவிதை தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டது. கவிதை எழுதிய மாணவர்களை கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின் புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். முடிவில் பள்ளி முதல்வர் விஜயா நன்றி கூறினார்.