அதிக அளவில் மது குடித்ததால் ஒருவர் உயிரிழப்பு

80பார்த்தது
அதிக அளவில் மது குடித்ததால் ஒருவர் உயிரிழப்பு
விழுப்புரம் அடுத்த வளவனுார், நரையூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 63; குடிப்பழக்கம் உடைய இவர், அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வளவனுார் பஸ் நிறுத்த நிழற்குடை அருகே மயங்கி விழுந்தார்.
உடன் அங்கிருந்தவர்கள் அவரை, மருத்துவம்னைக்குக் கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி