அரசு வழக்கறிஞரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி

61பார்த்தது
அரசு வழக்கறிஞரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி
அரசு வழக்கறிஞரிடம் ரூ. 30 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் ஜெய்குமார், 42; அரசு வழக்கறிஞர். இவர், தனது எலக்ட்ரிக் பைக்கை புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீசிற்கு விட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வாடிக்கையாளர் சேவையில் இருந்து பேசுவதாகவும், பைக்கில் வேறு பிரச்னை ஏதும் இருப்பின், அதன் விபரங்களை தான் அனுப்பும் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பதிவிட கூறினார்.

அதனை நம்பிய ஜெய்குமார், மர்ம நபர் அனுப்பிய ஆப்பை டவுன்லோடு செய்து பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்தார்.

சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மொபைல் போனில் மெசேஜ் வந்தது.

இதுகுறித்து ஜெய்குமார் நேற்று அளித்தகாரின் விழுப்புரம் சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி