மாவட்டத்தில் கோட்ட அளவில் மின் நுகர்வோர் கூட்டம் அறிவிப்பு

83பார்த்தது
மாவட்டத்தில் கோட்ட அளவில் மின் நுகர்வோர் கூட்டம் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அறிவித்தது. இதுகுறித்து, இந்தக் கழகத்தின் விழுப்புரம் மேற்பாா்வைப் பொறியாளா் லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் மின் நுகா்வோா் மற்றும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை தீா்க்கும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோட்ட அளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே, மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மக்கள் குறைதீா் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, கூட்டம் நடைபெறும் தேதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 11, 18 மற்றும் 25-ஆம் தேதிகளில் முறையே கண்டமங்கலம், செஞ்சி மற்றும் திண்டிவனம் கோட்டங்களுக்கான குறைதீா் கூட்டம் அந்தந்த கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகங்களில் நடைபெறவுள்ளன. இதில், அந்தந்த கோட்டங்களைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள், பொதுமக்கள் மின்விநியோகம் மற்றும் மின்சாரத் துறை சாா்ந்த தங்களது குறைகளை மனுவாகத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி