தீவனுார் விநாயகர் கோவில் மண்டல பூஜை வழிபாடு

59பார்த்தது
தீவனுார் விநாயகர் கோவில் மண்டல பூஜை வழிபாடு
மயிலம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நடக்கிறது.

இக்கோவிலில் கடந்த 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. நேற்று ஏழாம் நாள் மண்டல பூஜையையொட்டி, பக்தர்கள் கலசங்களை சுமந்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது.

மயிலம் தொகுதி முன்னாள் எம். எல். ஏ. , மாசிலாமணி, ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, தி. மு. க. , ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட பிரதிநிதி சேகர், ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன், செயலாளர் பிரபு உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.