திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

60பார்த்தது
திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, பொருளாளர் ஏழுமலை, தாளாளர் பழனி ராஜ் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பேராசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.


விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் விக்னேஷ், உடற்கல்வி இயக்குனர் சிவப்பிரகாஷ் செய்திருந்தனர். பேராசிரியர் கொளஞ்சியப்பன் ஏற்புரையாற்றினார்.


இயற்பியல் துறை தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

டேக்ஸ் :