இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, 2 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு மூடப்படும். அதன்பிறகு வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை கூட நீங்கள் எடுக்க முடியாது. மூடப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்ய, உங்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று KYC செயல்முறையைப் முடிக்க வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.