ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது - ஒரு படகும் பறிமுதல்!

50பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி