திண்டிவனத்தில் கார் பேட்டரிகளை திருடிய வாலிபர் கைது

83பார்த்தது
திண்டிவனத்தில் கார் பேட்டரிகளை திருடிய வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கலைஞர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). கார் மெக்கானிக். இவர் திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் கார் பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் திண்டிவனம் காலிமான் கொல்லை பகுதியை சேர்ந்த ரமணன் மகன் குணசேகரன் (24) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தனது கடையில் வாகனங்களின் உதிரிபாகங்கள் அடிக்கடி காணாமல் போனதை பிரகாஷ் கவனித்தார். இதையடுத்து அவர் கடையில் கண்காணிப்பு கேமராவை பொறுத்தினார். இந்த நிலையில் கடையில் பணிபுரிந்து வந்த குணசேகரன் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்த 8 கார்களின் பேட்டரிகளை திருடிச் சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த பிரகாஷ், உடனே இதுகுறித்து ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி