விக்கிரவாண்டியில் பேரூராட்சி கூட்டம்

552பார்த்தது
விக்கிரவாண்டியில் பேரூராட்சி கூட்டம்
விக்கிரவாண்டியில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் பாலாஜி, செயல் அலுவலர் ஷேக் லத்திப் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் 15 வார்டுகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள் கனகா, சுரேஷ், ரமேஷ், ரேவதி, புஷ்பராஜ், ஆனந்தி, சுதா, பிரியா, பவானி, வீரவேல், சுபா, வெண்ணிலா , துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், வரி தண்டலர் தண்டபாணி, பிரபா உட்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி