திண்டிவனத்தில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம்

61பார்த்தது
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து. ரவிக்குமார் ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் ஜெயபுரம், நள்ளிகொண்டபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவை யார் ஆள வேண்டும், யார் ஆளா கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். என்ன காரணத்துக்காக ஆளக்கூடாது, என்ன காரணத்துக்காக ஆள வேண்டும் என்பதற்காக நடைபெறுகிற தேர்தல். சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய ஆதரவைப் பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறார். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறார். இந்த கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக மாதம் ₹1000 கொடுக்கப்படுகிறது‌. திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் வழங்கினார் என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி