சின்ன நெற்குணத்தில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு

67பார்த்தது
திண்டிவனம் அருகே தனியார் பேருந்துகள் தங்கள் ஊரில் நிறுத்தப்படவில்லை என கிராம மக்கள் பேருந்து சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் அன்றாடம் திண்டிவனம் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்கும் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில திண்டிவனம் விழுப்புரம் மயிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல தனியார் பேருந்துகளையே பெரும்பாலும் நம்பி உள்ளனர். ஆனால் சமீப காலமாக தனியார் பேருந்துகள் இப்பகுதியில் நிறுத்தாமல் செல்வதால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமலும் மாணவ மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கிராம மக்கள் ஒன்று திரண்டு திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தனியார் பேருந்து ஓட்டுனர் இனிவரும் காலங்களில் இப்பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக கூறிய எடுத்து பேருந்து விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி