பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா, திருத்தேர் உற்சவம் நேற்று துவங்கியது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6: 00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலை 6: 00 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், 7: 30 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் தொடர்ச்சியாக மே மாதம் 6ம் தேதி செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதலும், இரவு சுவாமி வீதியுலாவும், 8ம் தேதி திருக்கல்யாணமும், 11ம் தேதி தபசு ஏறுதலும், 14ம் திருத்தேர் உற்சவமும், 15ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழாவும் நடக்கிறது.