திருவக்கரையில் தீமிதி திருவிழா

61பார்த்தது
திருவக்கரையில் தீமிதி திருவிழா
திருவக்கரை மன்னாதீஸ்வரர் பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. கடந்த 25ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 7: 00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்புடைய செய்தி