மார்க்கெட் கமிட்டி முன்பு விவசாயிகள் சாலை மறியல்

598பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் அமைந்துள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று காலை விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பனிப் பயிரான காராமணி மூட்டைகளை கொண்டு வந்து கிடங்குகளில் இறக்கத் துவங்கினர். 75% விவசாயிகள் தங்கள் கொண்டு வந்த பயிறு மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த பொழுது வேளாண்மை விற்பனை கூடத்தின் நுழைவாயில் கேட்டில் வரத்து அதிகரிப்பால் இன்று ஏலம் நடக்காது என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :