செஞ்சியில் தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம்

82பார்த்தது
செஞ்சியில் தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தேர்தல் தொடர்பான பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஸ்ரீதரன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது, செஞ்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி களில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தகவல்கள் கிடைத்தால், அங்கு உடனடியாக சென்று, தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பல்வேறு இடங்களில் மொபைல் பார்ட்டி எனும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்களுக்கு தகவல் வந்தவுடன் உடனடியாக சம் பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரச்சினைகளை சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு காவல்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி