ஒன்றரை மணி நேரம் கூடுதலாக நடைபெற்ற வாக்குப்பதிவு

565பார்த்தது
ஒன்றரை மணி நேரம் கூடுதலாக நடைபெற்ற வாக்குப்பதிவு. டோக்கன் வழங்கி வாக்களித்த பொதுமக்கள்

வேலூர் மாநகருக்குட்பட்ட டவுன்ஹாலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 15-ல் சுமார் வாக்குப்பதிவு தாமதம் ஆனதால் வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம் மாலை 6: 00 மணிக்குள்ளாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

1290 வாக்காளர்களைக் கொண்ட இந்த வாக்குச்சாவடி மையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததாலும், கடும் வெயிலின் தாக்கத்தால் மதிய வேளையில் வாக்காளர்கள் வராமல் மாலையில் குவிந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆறு மணிக்கு உள்ளாக வந்த 15 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு சுமார் ஏழு முப்பது மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.